Thursday, January 29, 2009

தீயில் எரிந்து இறந்த தமிழன் முத்துக்குமார்.........................


வலி....................... தாங்கமுடியவில்லை, பொறுத்துப் பொறுத்து பார்த்தும் பலனில்லை. பொங்கு எழுந்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிதும் பயன்படவில்லை. ஆனால் ஈழத்தமிழன் தாய் நாட்டிலேயே சிங்கள அரசின் கொடுமையான பல்முனைத் தாக்குதலில் கை, கால், உடல், உயிர் என இழந்து துடித்துக் கொண்டிருக்கிறான்.பிறந்த சிறு குழந்தை முதல் அனைத்து ஈழத்தமிழ் மக்களும் இலங்கை அரசின் வெறித்தனமான வான் வெளித்தாக்குதலுக்கு தமது உயிரை இழந்து அழுது புலம்பும் ஓலம் கேட்டு இங்கே நம் இதயம்வலிக்கிறது.


டி.வி சேனலைத் திருப்பினால் இலங்கைச் செய்தி, பிணக்குவியல்கள், பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது. தமிழனாகப் பிறந்தது பாவமா? இதைப் பார்த்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என எண்ணி தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்னிலயே தன் உடலிலேயே பெட்ரோல் ஊற்றி தீயில் எரிந்து பரிதாபமான நிலையில் இன்று காலை இறந்தார். ஒரு தமிழனிக்கு வலியென்றால் மற்ரொரு தமிழனுக்கு வலிப்பது இயல்பு தானே. ஆனால் இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சுய அரசியல் லாபத்துக்காக இலங்கைப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள். இப்படியே போனால் இலங்கையில் போரி முடியும் போது தமிழர்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும்.
விடுதைல்ப்புலிகள் தீரவாத இயக்கம் தான் அதை இந்தியர் நாம் அனைவரும் மறுக்க முடியது. அதற்கான தண்டனையை நாம் கொடுத்தே தீர வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த தமிழர்கள் அழிவதைப் பார்த்துக்கொண்டு நாம் சும்ம இருக்க முடியாது.இலங்கை அரசாங்கத்தையும் விடுதைலைப் புலிகளையும் தராசில் போட்டால் சமமாகத்தான் இருப்பார்கள்.ஆனால் அழிவது நமது இரத்தம் அல்லவா? இதற்கு என்ன செய்யவேண்டும் தமிழனாக இருந்து என் கருத்தைத்ச் சொல்கிறேன். என்னதான் இருந்தாலும் ராஜபக்ஷே என்ன வாக்குறுதி கொடுத்தாலும் இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்கையும் அழித்தெ தான் தீரும் . போர் முனையில் மாட்டிக்கொண்ட தமிழர்களில் குறைந்தது 75 சதவிகிதம் மக்களையாவது ராணுவம் அழித்து விடும். அதன் பின் மீதம் உள்ளவர்கள் உறவினர்களை இழந்து அனாதையாக இருந்து என்ன பயன்.


நமது அரசு என்ன செய்யவேண்டும், போர் முனையில் அகப்பட்டுத் தவிக்கும் மக்களை இந்திய அரசே தலையிட்டு நமது துருப்புக்களை அனுப்பி அத்தனை மக்களையும் காப்பாற்றி இரணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்திய அரசே பாதுகாப்புக் கொடுக்கவேண்டும். புலிகளும், ராணுவமும் பழைய பண்டைய காலத்து யுத்தைத்தைப்போல் மக்கல் இல்லாத இடத்தி போர் இட்டு மடியெட்டும் அதை பற்றி நாம் கவலிப்ப்டக் கூடாது. ஏனென்றால் நமது அப்படியில்லாமல் பிரனாப் முகர்ஜி- போல் வாக்குறிதி வாங்கிவிட்டென் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் வேலைக்காகாது. மக்கள் நிலவரத்தை பற்றி அறிவதற்காக இலங்கை செல்வதாக இருந்த முகர்ஜி சென்றதும் தெரியவில்லை திரும்பி வந்ததும் தெரியவில்லை. மின்னல் வேகத்தில் போய் 10 நிமிடத்தி தமிழர்களையெல்லாம் பார்த்து விட்டு சூறாவளி வேகத்தில் வந்து விட்டார்கள்.


ஆனால் ராஜபக்ஷே அறிவித்தார் தமிழர்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால். புரட்சித்தலவி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இலங்கை வந்து மக்களிடம் கேட்கலாம் என்று. ஆனால் நம்து முதல்வர் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.இப்படியே கண்டுகொள்ளாமல் போனதல் தான் இன்று முத்துக்குமார் என்ற தமிழனை இழந்திருக்கிறோம். இதற்கு மேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழர்களின் வலியைக் குறைக்க முடியாது. அதிகரித்துக் கொண்டே இருக்கும்

உங்களில் ஒருவன்

சுபாஷ்