பிராபாகரனின் மனைவி மதிவதனி, மகன் சார்லஸ் ஆண்டனி, மற்றும் மகள் இவர்கள் இங்கிலாந்து லண்டன் நகரில் ஏ.சி அறையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் ஈழத்தில் செத்து மடிவது அப்பாவித் தமிழர்கள். பிரபாகரனும் இன்னும் ஓரிரு நாட்களில் லண்டன் வருவதாக ரகசியத் தகவல் வேறு பரவுகிறது.
ஈழ யுத்தத்தில் அழிந்தது என்னவோ அப்பாவித் தமிழர்களே. போர் புரியும் விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு நபரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இறந்து இருக்கிறார்கள். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரபாக்ரன் குடும்பத்தில் யாருமே சாகவில்லை. இது எப்படி? தமிழராகிய நாம் உணர வேண்டும். என்று குட்டிமனி, தங்கத்துரையை கொல்வதற்கு "எட்டப்பன்" வேலை பார்த்தானோ பிரபாகரன் அன்றே ஈழத்தமிழர்களின் விடுதலை போரின் போக்கு மாறி தவறிவிட்டது. எப்போது ஸ்ரீ சபாரத்தினம் என்ற ஈழத்தின் முதல் ஆயுத போராட்ட மாவீரன் பிரபாக்ரனால் கொல்லப் பட்டானே அன்றே ஈழ மக்க்ளின் விடுதலையும் தோல்வி அடைந்து விட்டது
ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்ட அன்றே, கலைஞர் கருணாநிதி அவ்ர்கள் தனது அறிக்கையில் வெளியிட்டார். "ஈழத்தில் சிங்களவர்களுக்கு எதிரான யுத்தம் சகோதர யுத்தமாக மாறி உள்ளது. இந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாரன். அதற்கு பலிகேடாக தோழர் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீசபாரத்தினம் என்று கொல்லப்பட்டாரோ அன்றே ஈழப் போர் தோல்வியடைந்ததாகவே நான் கருதுகிறேன்"என்று அதிலிருந்து தமிழ் மக்கள் மேல் அனுதபப்படுவார். ஆனால் புலிகளை வெறுத்தார். இதில் அர்த்தம் இருக்கிறது. தங்கள் இஸ்டத்துக்கு எல்லாத்தையுமே செய்து விட்டு தோல்வி என்று வரும் போது. கலைஞரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
பிரபாகரன் ஈழ மக்கள் சுகந்த போராட்டத்தை தனது சுயநலத்துக்காக பயன் படுத்தி தானும் தனது நலம் விரும்பிகள் சிலரும் சேர்ந்து தமிழர்களின் ரத்தத்தில் குளிர் காய்ந்தார்களே தவிர , மக்களுக்காக பாடுபடவில்லை.
இலங்கையில் உள்ள மக்களில் பல லட்சம் பேர் விடுதலைப் புலிகளால் தான் செத்தார்களே தவிர ராணுவத்தால் அல்ல.தற்போது நடக்கும் இறுதிப் போரில் தான் ராணுவத்தால் தமிழர்கள் பெரும் அளவில் அழிக்கப் படுகிறார்கள். அதற்குக் காரணமும் பிரபாக்ரன் தான். மக்களை பணயக் கைதிகளாக வைத்து , ஐ.நா சபையின் இரக்கத்தைப் பெற்று தப்பித்து விடலாம் என்று. அது உலக நாடுகளுக்கு தெரியும்.அதுவும் குறிப்பாக இந்தியாவுக்கு தெரியும். அதனால் தான் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் முழிக்கிறார்.
ரானுவத்தால் மக்கள் அழிகிறார்கள் என்றால், மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரபாக்ரன் மக்களை அனுப்பிவிட்டு சண்டை போட்டிருக்கலாம். அதை செய்யவில்லை,, அல்லது மக்களைக் காக்க சரண்டர் ஆகியிருக்கலாம்.சிங்களவனிடம் சரண்டர் ஆனால் கொல்லுவான் என்றால், இந்தியாவிடம் ஆகியிருக்கலாம்.அதை விட்டு விட்டு, ஈழ மக்கள் அழிந்த பின் ஜெயித்தால் என்ன? தோல்வியடைந்தால் என்ன?
பிரபாகரனைத் தவிர்த்து , ஈழத்தின் அனைத்து அறிவாளிகளும் மேதைகளும் இறந்து விட்டார்கள். இப்போது ஸ்கூல் படிக்கும் சிறுவர்களை வைத்துக் கொண்டு போர் புரியும் பிரபாகரன் போன்ற சுயநல வாதிகளுக்கு உயிரின் வலி எப்படி தெரியும்??? மகனோ, மகளோ அல்லது மனைவியோ இறந்திருந்தால் தெரிந்திருக்கும். அவ்ர்கள் ஏ.சி அறையில் ஈழத் தமிழனின் ஓ.சி பணத்தில் அல்லவா வாழ்கிறார்கள்
சுபாஷ் சந்திரபோஷ்
Thursday, April 16, 2009
Subscribe to:
Comments (Atom)