Wednesday, May 20, 2009

பிரபாகரனுடன் ஹிப்னாடிஸ முறையில் உரையாடினேன் -பழ.நெடுமாறன்

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை ராணுவமும், அரசாங்கமும் அறிவித்துவிட்டது. இச்செய்தியை இந்திய அரசாங்கமும் தனது மைவுனம் மூலம் "ஆம்" என்பதை தெரிவித்து விட்டது. உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழ் மக்களில் பெரும் பாலனவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

ஒருசிலர் மட்டுமே ஏற்க மறுக்கிறார்கள். பிரபாகரன் இறக்கவில்லை என்றும், அவர் சாயலில் உள்ள வேறு ஒருவருடைய பிணத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்றும் கூறிவருகிறார்கல்.

ஆனால் இங்கெ இன்று பேட்டி அழித்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கூறுகையில் "பிரபாகரன் நலமாக இருக்கிறார், ஈழத்திலேயே இருக்கிறார், போரை தலமையேற்று நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த தகவலை நான் ஹிப்னாடிஸம் என்ற கலையை பயன்படுத்தி அவருடனேயே பேசினேன் என்று தெரிவித்துள்ளார்."

Tuesday, May 19, 2009

கொல்லப்பட்டது புலித் தலைவர் பிரபாகரன் தான்!

இலங்கை ராணுவமும், அரசாங்கமும் நேற்று புலித் தலைவர் பிரபாகரனின் பிணத்தை நந்திக் கடலில் எடுத்ததாக கூறி பிணத்தை காண்பித்தனர். ஆனால், ஈழத்தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களில் பல பேர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் அவருடைய சாயலில் உள்ள வேறு ஒருவருடையை பிணத்தை இலங்கை அரசு பயன் படுத்துகிறது என்றும், அவர்கள் அவ்வாறு பயன் படுத்துவதற்கு காரணம் பிரபாகரன் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதற்காக என்று கூறுகிறார்கள்

பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூட பிரபாகரன் சாகவில்லை என்று அடித்துக் கூறினார். இவர்கள் அனவரும் நம்புவதாலோ, கூறுவதினாலோ உணமை மறைக்கப் பட்டு விடாது என்பது என் கருத்து. இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.

தமிழ் உணர்வு கொண்ட தமிழன் தான். அவர் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் ஆதாரத்துடன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ,பிரபாகரன் இறந்தற்கான காரணங்கள் பல உண்டு.

1) பிரபாகரன் பிணத்தை முன்னால் பிரபாகரனின் தளபதியும், 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்தவருமாண கருணா அம்மான் அவர்களே உறிதிப் படுத்தியுள்ளார்.(நாம் போட்டோக்களிலும், வீடியோக்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்)

2) ஆரம்ப காலங்களில் பிரபாகரனின் தோழரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி படுத்தியுள்ளார்.

3) இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசங்காமோ போலித்தனமாக உலகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இறக்கவில்லை என்றால் இருப்பிடத்தை சொல்லாமல் பிரபாகரன் வீடியோ பேட்டி கொடுக்கலாம்.

4) புலிகளின் செய்தித் தொடர்பாளர் பத்பநாபன் அவர்கள் பிரபாகரனி பிணத்தைக் இலங்கை அரசு கைப்பற்றீய பின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.

எப்படியோ இலங்கை அரசு புலிகளை ஈழத்திலிருந்து அகற்றி விட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்ள்ள தான் வேண்டும். மாவீரனாக இறந்த புலித்தலவருக்கும் மற்றைய புலிகளுக்கும் எமது வீர மரியாதையை செலுத்த கடமைப் பட்டுள்ளோம். "போகும் பாதை தவவென்றால் அதன் முடிவும் தவறாகவே முடியும்" என்பதற்கு புலிகளே எடுத்துக்காட்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள் வேண்டும்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.பிரபாகரன் உடல் மற்றும் அடையாள அட்டை காண்பித்துள்ளனர். பிரபாகரனின் பின் மண்டையில் பலத்த அடி பட்டுள்ளது. மண்டைப்பகுதியை துணி வைத்து மூடியுள்ளனர். மேலும், இறந்தது பிரபாகரன் தான் என்று மரபனு சோதனை மூலமும் உறுதிபடுத்தியுள்ளனர்.

Thursday, April 16, 2009

நான் சுயநலவாதியா -பிராபாகரன் பற்றிய அலசல் ரிப்போர்ட்!

பிராபாகரனின் மனைவி மதிவதனி, மகன் சார்லஸ் ஆண்டனி, மற்றும் மகள் இவர்கள் இங்கிலாந்து லண்டன் நகரில் ஏ.சி அறையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் ஈழத்தில் செத்து மடிவது அப்பாவித் தமிழர்கள். பிரபாகரனும் இன்னும் ஓரிரு நாட்களில் லண்டன் வருவதாக ரகசியத் தகவல் வேறு பரவுகிறது.

ஈழ யுத்தத்தில் அழிந்தது என்னவோ அப்பாவித் தமிழர்களே. போர் புரியும் விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு நபரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இறந்து இருக்கிறார்கள். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரபாக்ரன் குடும்பத்தில் யாருமே சாகவில்லை. இது எப்படி? தமிழராகிய நாம் உணர வேண்டும். என்று குட்டிமனி, தங்கத்துரையை கொல்வதற்கு "எட்டப்பன்" வேலை பார்த்தானோ பிரபாகரன் அன்றே ஈழத்தமிழர்களின் விடுதலை போரின் போக்கு மாறி தவறிவிட்டது. எப்போது ஸ்ரீ சபாரத்தினம் என்ற ஈழத்தின் முதல் ஆயுத போராட்ட மாவீரன் பிரபாக்ரனால் கொல்லப் பட்டானே அன்றே ஈழ மக்க்ளின் விடுதலையும் தோல்வி அடைந்து விட்டது

ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்ட அன்றே, கலைஞர் கருணாநிதி அவ்ர்கள் தனது அறிக்கையில் வெளியிட்டார். "ஈழத்தில் சிங்களவர்களுக்கு எதிரான யுத்தம் சகோதர யுத்தமாக மாறி உள்ளது. இந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாரன். அதற்கு பலிகேடாக தோழர் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீசபாரத்தினம் என்று கொல்லப்பட்டாரோ அன்றே ஈழப் போர் தோல்வியடைந்ததாகவே நான் கருதுகிறேன்"என்று அதிலிருந்து தமிழ் மக்கள் மேல் அனுதபப்படுவார். ஆனால் புலிகளை வெறுத்தார். இதில் அர்த்தம் இருக்கிறது. தங்கள் இஸ்டத்துக்கு எல்லாத்தையுமே செய்து விட்டு தோல்வி என்று வரும் போது. கலைஞரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
பிரபாகரன் ஈழ மக்கள் சுகந்த போராட்டத்தை தனது சுயநலத்துக்காக பயன் படுத்தி தானும் தனது நலம் விரும்பிகள் சிலரும் சேர்ந்து தமிழர்களின் ரத்தத்தில் குளிர் காய்ந்தார்களே தவிர , மக்களுக்காக பாடுபடவில்லை.

இலங்கையில் உள்ள மக்களில் பல லட்சம் பேர் விடுதலைப் புலிகளால் தான் செத்தார்களே தவிர ராணுவத்தால் அல்ல.தற்போது நடக்கும் இறுதிப் போரில் தான் ராணுவத்தால் தமிழர்கள் பெரும் அளவில் அழிக்கப் படுகிறார்கள். அதற்குக் காரணமும் பிரபாக்ரன் தான். மக்களை பணயக் கைதிகளாக வைத்து , ஐ.நா சபையின் இரக்கத்தைப் பெற்று தப்பித்து விடலாம் என்று. அது உலக நாடுகளுக்கு தெரியும்.அதுவும் குறிப்பாக இந்தியாவுக்கு தெரியும். அதனால் தான் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் முழிக்கிறார்.

ரானுவத்தால் மக்கள் அழிகிறார்கள் என்றால், மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரபாக்ரன் மக்களை அனுப்பிவிட்டு சண்டை போட்டிருக்கலாம். அதை செய்யவில்லை,, அல்லது மக்களைக் காக்க சரண்டர் ஆகியிருக்கலாம்.சிங்களவனிடம் சரண்டர் ஆனால் கொல்லுவான் என்றால், இந்தியாவிடம் ஆகியிருக்கலாம்.அதை விட்டு விட்டு, ஈழ மக்கள் அழிந்த பின் ஜெயித்தால் என்ன? தோல்வியடைந்தால் என்ன?

பிரபாகரனைத் தவிர்த்து , ஈழத்தின் அனைத்து அறிவாளிகளும் மேதைகளும் இறந்து விட்டார்கள். இப்போது ஸ்கூல் படிக்கும் சிறுவர்களை வைத்துக் கொண்டு போர் புரியும் பிரபாகரன் போன்ற சுயநல வாதிகளுக்கு உயிரின் வலி எப்படி தெரியும்??? மகனோ, மகளோ அல்லது மனைவியோ இறந்திருந்தால் தெரிந்திருக்கும். அவ்ர்கள் ஏ.சி அறையில் ஈழத் தமிழனின் ஓ.சி பணத்தில் அல்லவா வாழ்கிறார்கள்

சுபாஷ் சந்திரபோஷ்

Friday, March 6, 2009

தேர்தல் களத்தில் 'டெ.....ர்......ர......ர் காமெடியன்கள்' மூன்று பேர்: பயங்கர கொலைவெறி பிரச்சாரம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மத்தியிலிருந்து மாநிலங்கள் வரை உள்ள எல்லாக் கட்சிகளும் தத்தம் தேர்தல் பணிகளில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன. அதிலும் மத்தியில் காங்கிரளூம், பி.ஜே.பியும் பலமான காட்சிகளாகவும் இவை இரண்டுமே குதிரைவேகத்தில் களத்தில் காய்களை நகர்த்தும் வேகத்தில், நமது தமிழ் நாட்டிலும் அதிமுக , திமுக இந்த இரண்டு கட்சிகளுமே பலமான கட்சிகள் என்பதால் தமது கட்சியை பலப்படுத்துவதுடன் தமது கூட்டனிக் கட்சிகளையும் தக்க வைத்துக் கொள்வதிலும், எதிர்க்கட்சியின் கூட்டனிக் கட்சிகளை தமது பக்கம் இழுப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

தேர்தலில் ஜெயிப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதும் நடைமுறை படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள வேளையில். பிரச்சாரம் செய்ய திறமையுள்ளவர்களை பயன் படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த டாப் லெவல் கட்சிகளின் பார்வை சினிமா பக்கம்தான் அதிகமாக உள்ளன. சினிமா நடிகர்கள் என்றால் தான் கூட்டம் கூடும் என்பதால். இந்த தேர்தலில் நடிகர் நடிகைகளை தம் பக்கம் இலுப்பதிலும், விலைக்கு வாங்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன.அதிலும் கட்சிகள் காமெடி நடிகர்களை களம் இறக்கி விசித்திரமான முறையில் ஓட்டுகளை அள்ள திட்டமிட்டுள்ளதாக தகவால்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய ட்ரெண்ட்-க்கு ஏற்ற நகைச்சுவை நடிகர்களும் களம் இறங்க கொலைவெறி ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வருகிறது.அதிரடியாக களம் இறங்கும் நடிகர்கள்.

1) டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்
2) பயங்கரமான காமெடியன் T.ராஜேந்திரன்
3) கொலைவெறி காமெடியன் சுந்தர்.C

டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்:
தாவது நாயகன் படத்தின் மூலம் உலகம் முழுவதும் டெர்...ர...ர் காமெடியன் என உலா வரும் ரித்தீஷை களத்துல் இறக்க தீர்மானித்துள்ளன. அவருக்கு தேர்தல் புதிதல்ல.ஆனால் அவர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான கெட்டப்பில், பல விசித்திர தோற்றங்களில் கலக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரித்தீஷ் தினம் ஒரு தொகுதி என பிரச்சாரம் செய்வார். அவர் ஒவ்வோரு ஊர்களுக்குச் செல்லும் போதும் விதவிதமான கோமாளி ஆடைகளை அனிந்து 'நாயகன்' படத்தில் உள்ள சில காமெடிகளை மேடையில் நடித்துக் காட்டி வாக்காளர்களை சிரிக்க வைப்பது தான் அவருடை இந்த தேர்தல் பிரச்சார டெக்னிக்.

இலவச பிரியானி சாப்பிட்டுகொண்டு இந்த நகைச்சுவகளைப் பார்த்து மக்கள் மெய்மறந்து சிரிக்க வைத்து ஓட்டுக்களை அள்ளுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு காமெடியையும் பொறுமையாக் உட்கார்ந்து, பயந்து ஓடாமல் பார்ப்பவர்களுக்கு தலைக்கு 50/= என ரூபாய் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் ரித்தீஷ். கடைசிவரை அனைத்து காமெடிகளையும் பார்ப்பவர்களுக்கு சிறப்புப் பருசுகள் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பயங்கரமான காமெடியன் T.ராஜேந்திரன்:
வரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல தேர்தலில் பிரச்சாரம் பன்னிய அனுபவம் உண்டு. இவர் அதே பானியைத் தான் இந்த தேர்தலிலும் கடைப் பிடிப்பார் என தெரிகிறது. இதுவரை நடந்த தேர்தலில் இவருடைய பிரச்சாரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கில் தான் மக்கள் ஹார்ட் அட்டக்கில் இறந்துள்ளனர். பாதி பேர் தெற்க்கு ஆப்பிரிக்கா காடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அதனால் இவரை விலைக்கு வாங்கி பிரச்சாரத்துக்கு பயண்டுத்த பல கட்சிகள் போட்டி போடுகின்றன , இவரது பிரச்சாரத்தின் ட்ரெண்டை இந்த தேர்தலில் கொடூரமாக இருக்கும் என் தெரியவருகின்றது. அதாவது இவர் இது வரை தமது ஆதரவு உள்ள கட்சி மேடைகளிலேயே முழங்கி வந்தார். ஆனால் இந்த் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவு அதிகமாக உள்ள தொகுதிகளுகு சென்று எதிக்கட்சியினரின் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக சென்று வீட்டு முன்நின்று காட்டுக் கத்து கத்துவார்.

தனால் பலவீனம் ஆனாவர்கள் கரடி வீட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்து ஹார் அட்டாக்கில் போய் சேர்ந்து விடுவார்கள். மற்றவர்கள் காடு, மலை என ஓட்டம் பிடித்து விடுவார்கள். இதனால் எதிர் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை கனிசமான முறையில் குறைத்து, ஆதரவு கட்சியை ஜெயிக்க வைப்பது தான் இவரது இந்த தேர்தல் ட்ரெண்ட்.இவரைப் பயன் படுத்தும் கட்சிக்கே வெற்றி அதிகமாக இருக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவர் தேர்தல் நடைபெறும் பூத்துக்கு சென்று காட்டுக் கத்து கத்துவார். இதனால் கரடியைப்பார்த்து தேர்தல் அதிகாரிகள், மக்கள் என எல்லோரும் ஓடிவிட ஆதரவு அணி கள்ள ஓட்டுக்களை போட்டு எளிதாக் ஜெயித்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொலைவெறி காமெடியன் சுந்தர்.C :
பு
திதாக முளைத்துள்ள காமெடியன் சுந்தர்.C . இவருக்கு இதுவே முதல் தேர்தல் என்பதால் இவரும் புதிய நுனுக்கத்துடன் தேர்தல் களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளார். இவரைப் பயன்படுத்தும் கட்சி. இவர் 'தீ' படத்தில் ஆக்ட் பன்னிய அனைத்து காமெடிகளையும் (A to Z படம் முழுவதும்) "மூன்றாம் பிறை" கமல் நடிப்பில் வெளிப்படுத்த உள்ளார். இவருடைய பிரச்சாரம் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் மிக்ஸ் பன்னி இருக்கும் இதனால் சில நேரங்களில் டெ...........ர்.................ர................ர் ஆகவும், சிலநேரங்களில் பயங்கரமான காட்டு........... கா..................மெ.........டியனாகவும். குட்டப் மாறி மாறி, ஒட்டப்பிலும் வந்து காமெடி பன்னி ஆதரவைப் பெறுவது தான் இந்தக் கட்சியின் வேலை. ஒட்டப்பில் வரும் போது பெண்களின் ஓட்டை அள்ளி விடலாம் என நினைக்கிறார்.

வர் தன்னுடன் கூட வந்த ஆதரவு கட்சி வேட்பாளர்களையே சில நேரங்களில் தற்கொலை செய்ய வைக்கும் அளவிற்கு பிரச்சாரம் பன்னுவார் என எதிர்பார்ப்பதால். ஆதரவு கட்சி வேட்பாளர்களே இவர் மேல் கொலைவெறி பயத்தில் உள்ளனர். சில நேரங்களில் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் கலவையாக ஒரு சிரிப்பு சிரிப்பார். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

(இது யாரையும் புண் படுத்துவதற்க்காக எழுத்தப்பட்டவை அல்ல, சிரித்து மகிழ எழுத்தப்பட்டவை)

Monday, March 2, 2009

Sunday, March 1, 2009

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். மறக்க முடியுமா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கொள்கைநல்லூர் முத்துக்குமாரை. ஆனால் நடப்பது என்ன. மறந்து விட்டோமே அந்த வீர தமிழ் வாலிபனை. அவன் எடுத்த தவறான அணுகுமுறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், யாருக்காக அவன் தன் உயிரைத் துறந்தான், தமிழருக்காக, ந்மக்காக. பாதிக்கப்பட்டது அவனது குடும்பம். வாழவேண்டிய வயதிலே ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கி தன் மறைவின் மூலமாது ஆங்காங்கே சிதறக்கிடக்கிற தமிழ் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து போராடி ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் என்று தானே உயிர் நீத்தான்.

இன்று நடப்பது என்ன? அவனது இறப்பையே அரசியல் ஆக்கி பணம் சம்பாதித்தார்கள் பல தலைவர்கள். முதலைக்கண்ணீர் வடிக்க மட்டும் தவறவில்லை, தமிழுக்காக எதுவேண்டுமென்றாலும் செய்வேன். தமிழருக்காக் உயிரைக்கூட குடுப்பேன் என்று சொன்ன தலைவர்கள் எல்லாம் ஏ.சி அறையில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.மேடைப்பேச்சிலே மப்பில் இருப்பதுபோல் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசும் தலைவர்கள் ஆட்சியில் இருந்தும் என்ன செய்தார்காள். பினந்தின்னி கழுகுகழாக மாறி சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழன் ரத்தத்தில் குளிர் காய்கிறது. அதை வேடிக்கைதானெ பார்க்கிறார்கள்.அதிகமாகப் போனான் தேர்தல் அறிக்கை போல் சில அறிக்கைகளை அள்ளி வீசுவார்கள். அறிக்கை வீசும் அந்த ஒவ்வொரு வினாடிய்ம் பல தமிழர்கள் கொல்லப் ப்டுகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை.

தினமும் பல நூறு என் உறவுகள் மடிந்து கொண்டு இருக்கிறது.தமிழர்களின் அழிவிற்க்கு சிங்கள ராணுவம் மட்டும் அல்ல. அவர்களைக் கேடயமாக பயன்படுத்தும் புலிகளும் தான் காரணம்.தவறைத் தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு சிங்கள பத்திரிக்கையாளர்களாக இருந்தபோதிலும் 'வெள்ளை வேன்' முறையில் கடத்திச்செண்று கொலை செய்கிறது. சிங்களப் பத்திரிக்கைத் துறைக்கே இந்த நிலமையென்றால். தமிழ் பத்திரிக்கையை சொல்லவே வேண்டாம். தமிழர்களாக நாம் இருந்தும் நம்மால் முடியவில்லையே என்றென்னும் போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கிறது. கோழைகளாக வாழ்ந்த நம்மை நம் வீரத்தை வெள்ளையர்களுக்கு காண்பித்த சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த மண்ணில் பிறந்து , நமது இன அழிவுக்கெ நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே??????????

பிஞ்சுக் குழந்தை கருவறையை விட்டு வெளியே வருமுன்னே கல்லறைக்கு போகிறததே இந்தக்கொடுமை எங்காவது நடந்த துண்டா? ஈழ மண்ணில் ஐ. நா தடை விதித்த கிளஸ்டர் குண்டுகளெல்லாம் தமிழினத்தை சுடுகாடு போக முன்னோயே எரித்து சாம்பல் ஆக்குகிறதே. இதையெல்லாம் பார்க்கும் போது. சுகந்திரமும் தேவையில்லை அரசாங்கமும் தேவையில்லை. மன்னர் ஆட்சியே போதும் என்றெல்லவா தோன்றுகிறது.